| புதிர் விளையாட்டின் இளவரசிக்கு | | | |||
| |||||
| புதிர் விளையாட்டின் கலைந்த உருவங்களைச் சேர்ப்பதில் அம்மு ஒரு நிபுணியாகிவிட்டாள் அவளைக் குழப்பும் எனது எல்லா முயற்சிகளையும் அவள் வெற்றிகரமாகக் கையாள்கிறாள் ஒரு முறை கூட அவள் சிங்கத்தின் தலையில் ஒரு மாட்டின் தலையைப் பொருத்துவதில்லை குதிரையின் கால்களுக்குப் பதில் வாத்தின் கால்களை மாற்றி வைத்ததில்லை தச்சனின உபகரணங்களில் அவள் தையல் ஊசியை சேர்ப்பதில்லை ஒப்பனை செய்யும் பெண்ணின் கையில் அவள் சுத்தியலைக் கொடுப்பதில்லை தும்பிகளின் விலாக்களில் அவள் பருந்தின் சிறகுகளை நுழைப்பதில்லை மீனின் கண்களின் இடத்தில் கழுகின் கண்களை மாற்றியதேயில்லை அம்மு அவள் பூர்த்தி செய்யவேண்டிய புதிர் விளையாட்டின் சிறு பகுதி காணாமல் போகும்போது அமைதியிழந்து விடுகிறாள் அவளது மொத்த உலகின் சிதைக்கப்பட்ட ஒரு பகுதிபோல அது அவளது ஆறாத காயமாகிறது அது தனது வெற்றிகளுக்கு எதிரான நெறியற்ற சதி என்பதை அவள் சீக்கிரமே கண்டுபிடித்து விடுகிறாள் நான் எனது எல்லா புதிர்விளையாட்டுகளிலும் ஒரு புலியின் உடலில் ஒரு ஆட்டின் தலையாக இருந்தேன் அல்லது ஒரு மீனின் உடலில் பாம்பின் வாலாக அசைந்தேன் எப்போதும் என் விதியின் வரைபடத்தில் காணாமல் போகும் பகுதிகளை நான் தேடியதே இல்லை இதுதான் முழுமை என்று எப்போதும் பிடிவாதமாக நம்பவைத்தேன் எல்லாவற்றையும் விட கலைக்கப்பட்ட எதையும் உரிய இடத்தில் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நான் அதை இன்னும் கொஞ்சம் சீர்குலைக்கிறேன் அதில் இன்னும் கொஞ்சம் ரத்தம் சிந்துகிறேன் | |||||
Thursday, February 24, 2011
மனுஷ்யபுத்திரன் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment