Pages

Thursday, February 24, 2011

லஞ்சம் – ஊழல்… இந்தியாவை அரிக்கும் புற்றுநோய் ! – டாக்டர் கலாம்


by-dr-apj-abdul-kalamதுபாய்: இந்தியா சந்தித்து வரும் மிகப்பெரும் சவால்களில் ஊழலும் ஒன்று. அது புற்று நோயைப் போல தேசத்தை அரித்து வருகிறது, என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.
துபாயில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்துள்ள அப்துல்கலாம், அங்குள்ள பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “அரசியல்-அதிராக வர்க்கம்-நீதி அமைப்பில் ஊழல் பரவி வருகிறது. அதன் வளர்ச்சி வேதனை அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா அதற்கு ‘கீமோதெரபி’ அளிப்பது மிக அவசியம். தனிமனித நேர்மை மிக முக்கியம். வளரும் தலைமுறை இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது கஷ்டம்தான் என்றாலும் அது சாத்தியமே. நம்மால் முடியும். ஆனால் அதற்கான மனநிலையை வளர்த்தெடுக்க வேண்டும்.” என்றார் கலாம்.

No comments:

Post a Comment